<?xml version="1.0" encoding="UTF-8"?><!-- generator="WordPress.com" -->
<rss version="0.92">
<channel>
	<title>எனது நூல்கள்</title>
	<link>http://xavierbooks.wordpress.com</link>
	<description>Just another WordPress.com weblog</description>
	<lastBuildDate>Thu, 27 Nov 2008 05:36:13 +0000</lastBuildDate>
	<docs>http://backend.userland.com/rss092</docs>
	<language>ta</language>
	
	<item>
		<title>முடிவல்ல துவக்கம்</title>
		<description><![CDATA[ 
முடிவல்ல துவக்கம்

நல்ல விதைகள் எப்போதுமே
பயன் தராமல் போவதில்லை,
இயேசுவின் மரணம்
புதைப்பல்ல,
விதைப்பு.
மனுக்குலத்தின் மீட்பு
மண்ணுக்குள் மரணிக்குமா ?
இல்லை
அது தரயில் பயணிக்கும்.
சதிகளின் சட்டங்கள்
உடலை வருத்தின,
நீதியின் தேவன்
புது உயிரை வருத்தினார்.
நிரந்தர மீட்பைத்
மக்களுக்குத் தரவே
மீட்பரின் உயிர்ப்பு வரமானது.
வரலாறுகள் எல்லாம்
நரை முடி தடவ,
புது வரலாறு ஒன்று
புதிதாய் இதோ இங்கே
நிகழ்ந்தது.
இது,
ஏழைகளுக்காய் விழுந்த
தங்கத் துண்டு,
மக்கள் தொண்டு
கொண்டு
வாழ்வை வென்றவரின்
ஓர்
இறவாக் காவியம் இது.
இயேசு,
மனிதராய் வந்ததால்
மனுமகனானவரல்ல,
மனுமகனாகியதால்
மனிதனாய் வந்தவர்.
எனவே
சாவு அவருக்கு
சாய்வு நாற்காலி.
சாவு அவருக்கு இன்னொரு ஓய்வு,
மரணம் அவருக்கு
விசுவாச ஊழியன்.
இதோ,
இந்த மகத்துவ சகாப்தம்
இங்கே முற்றுப் பெறவில்லை&#8230;
ஆரம்பமாகிறது.
இது
மண்ணில் விழுந்து
மனதில் முளைக்கும் விதை.
கேட்கச் செவியுள்ளவன்
கேட்கட்டும்.
 
 


 
 
 
விசுவசியுங்கள்,
நம்பிக்கையில்லாமல் செய்யும்
செயல்கள் எல்லாம்
நடுக்கடலில் விழுந்த
துடுப்பிழந்த படகு [...]<img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=xavierbooks.wordpress.com&blog=5605767&post=35&subd=xavierbooks&ref=&feed=1" />]]></description>
		<link>http://xavierbooks.wordpress.com/2008/11/23/jesus_life10/</link>
			</item>
	<item>
		<title>இயேசுவின் உயிர்ப்பு</title>
		<description><![CDATA[ 
இயேசு உயிர்க்கிறார்
 
இயேசுவின் உடல்
கல்லறைக்குள்
அடைக்கப்பட்ட
மூன்றாம் நாள் வந்தது.
உயிர்ப்பேன் என்று
இயேசு
உரைத்திருந்த
மூன்றாவது நாள் வந்தது.
காவலர்கள்
கவனம் கூட்டினார்கள்
ஆர்வலர்கள்
புலன்கள் தீட்டினார்கள்.
திடீரென
பெரிய நடுக்கம் நடந்தது.
மலைகளின் தலைகளிலிருந்து
கற்கள்
புரண்டோ டின.
பிணியாளிகள் பலரின்
அகம்
சுகமானது.
வானத்திலிருந்து
ஓர்
பேரொளி பாய்ந்தது.
அது
கல்லறைக் கதவுகளை
சொல்லாமல் திறந்தது.
காவலர்கள்
கண்மைக்காமல் வியந்தனர்.
உயிரின் ஆழம் வரை பயந்தனர்.
இதோ,
ஆச்சரியங்கள் எல்லாம்
விழிகளை அகலத் திறக்க,
இயேசு
உயிர்த்துவிட்டார்.
மரணத்தின் மதில் சுவரால்
தனியாக்கப் பட்ட
உடலும் உயிரும்
உயிர்ப்பின் கதவால் ஒன்றாயின.
இது,
உடல் உயிர்கொண்ட
சம்பவமல்ல,
மனுமகன் மகிமை கண்ட
சம்பவம்.
கிறிஸ்தவத்தின் மையம்,
மனுமகனின் உயிர்ப்பு.
இதோ
எல்லோருக்கும் முடிவுரையாகும்
கல்லறை,
கிறிஸ்தவத்துக்கு முன்னுரையாகிறது.
எல்லோருக்கும்
அவமானச் சின்னமாயும்,
வெறுப்பின் விளக்கமாகவும் இருந்த
சிலுவை,
கிறிஸ்தவத்தின்
அடையாளமாகிறது.
இயேசு,
உயிர்த்து விட்டார்.
நீதியின் சாவு நிரந்தரமல்ல
என்பது
நிரூபிக்கப் பட்டது.
ஆணிகளுக்குள் அறையப்பட்ட
இயேசுவோடு
மறைந்தன முன் பாவங்கள்.
உயர்த்தப்பட்ட மனுமகனோடு
உயிர்த்தெழவேண்டும்
நற்செயல் நாற்றுகள்.

அன்னைக்கு முதல் காட்சி
 
கதிரவன்
கடலில் குளித்துக் கரையேறி
காலைப் பயணம் [...]<img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=xavierbooks.wordpress.com&blog=5605767&post=33&subd=xavierbooks&ref=&feed=1" />]]></description>
		<link>http://xavierbooks.wordpress.com/2008/11/23/jesus_part8/</link>
			</item>
	<item>
		<title>வேதனைக் காலம்</title>
		<description><![CDATA[ 
பாடுகளின் முன்னறிவிப்பு
 
தனக்கு வரப்போகும்
பாடுகளின் பாதையை
விளக்கத் துவங்கினார்
இயேசு
துயரங்களின் துருவங்களுக்கே
தான்
பயணிக்கப்போவதை
அடுத்திருந்த சீடர்களுக்கு
எடுத்துக் கூறினார்.
மனுமகன்
மரணத்திற்குள் தள்ளப்பட்டு
மண்ணுக்குள் மூன்று நாள்
புதைக்கப்படுவார்.
மனுமகன்
முற்றுப்புள்ளி இடப்படும் கதையல்ல,
அவர்
ஆரம்பத்துக்காய் புதைக்கப்படும்
விதை.
மூன்றாம் நாள்
நான் உயிர்ப்பேன்.
மரணத்தின் சுருக்குக் கயிறுகளில்
மரணத்தைத் தூக்கிலிட்டு
நான் உயிர்ப்பேன்.
இயேசு சொல்ல
சீடர்கள் அதிர்ந்தனர்.
இயேசுவின் பின்னால்
கர்வத்துடன் பவனி வந்தவர்கள்,
இயேசு
மரணிப்பேன் என்றதை
ஜீரணிக்காமல் பார்த்தனர்.
சட்டென்று
சங்கடத்தின் வார்த்தைகள்
அவிழ்த்தார் சீமோன்.
ஆகாது ஆண்டவரே&#8230;
உமக்கிது நேராது,
என் விழிகள் அதை பாராது.
இயேசுவின் வார்த்தைகள்
கோபத்தில் எழுந்தன.
போ அப்பாலே சாத்தானே.
நீ
கடவுளின் கருத்துக்கு
விரோதமாய் நகர்கிறாய்.
இறப்பதற்காகவே
பிறந்தவன் நான்.
என் சாவு
தற்காலிக இருள் போன்றது
நிரந்தர வெளிச்சத்தின்
முன்னுரை அது.
கடவுளின் விருப்பத்தை
ஆமோதிக்காதவர்கள்
அகன்று போகட்டும்.
இயேசுவின் கோபத்தில்
சிக்குண்ட சீமோன்
பாயும் சிங்கத்தைக் கண்ட
பசு போல
சத்தமின்றி பின்வாங்கினார்.
 
 
துணிந்தபின் விலகாதே
ஒருவன்
கோபுரம் [...]<img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=xavierbooks.wordpress.com&blog=5605767&post=31&subd=xavierbooks&ref=&feed=1" />]]></description>
		<link>http://xavierbooks.wordpress.com/2008/11/23/jesus_part7/</link>
			</item>
	<item>
		<title>இறுதி நாளுக்கான எச்சரிக்கைகள்</title>
		<description><![CDATA[முடிவுக்கான அறிகுறிகள்
 
இறுதி நாளின்
அறிகுறிகளென்ன ஆண்டவரே ?
சீடர்கள்
தூவிய கேள்விக்கு
தூயவன் பதில் சொன்னார்.
என் பெயரைச் சொல்லி,
நான் தான் மெசியா என்று
ஈசல் கூட்டங்கள்
எழும்பி அலையும்.
எச்சரிக்கையாயிருங்கள்.
போர் முழக்கங்களையும்,
மரணத்துக்கான பறையடியையும்
கேட்டு
கலங்கவேண்டாம்.
இவை நிகழவேண்டிய நிஜங்கள்.
இது
ஒரு முடிவின் துவக்கம் மட்டுமே.
இதுவே
முடிவின் முடிவொலி அல்ல.
நாடுகள் தாகம் கொண்டு
நாடுகளை
அழிக்க எழும்பும்.
அரசுகள் அரசு வெறி கொண்டு
அரசர்களோடு
ஆயுத போதனை நடத்துவர்.
நோய்களும்
பஞ்சங்களும்
உயிர் குடித்து
வீர்த்துக் கிடக்கும்.
உங்களை மக்கள்,
வேதனைக்கு விற்று விடுவார்கள்,
கொலைக் கயிறுகள்
உங்களுக்கு பரிசாக விழும்.
தெய்வத்தில் தைரியமாயிருங்கள்.
என்னை நேசிப்போரை
மக்கள் வெறுப்பார்கள்.
மக்கள் பலர்
இடறல் வெள்ளத்தில் வீழ்ந்து
மனுமகனை மறுதலிப்பர்.
ஒருவன் விரல்
இன்னொருவன் நெஞ்சுக்கு நேராய்
உயிர் கொல்லியாய்
உருமாறி நீளும்.
அக்கிரமங்களின் அணிகலன்கள்
மட்டுமே
அகிலம் முழுதும் அணியப்படும்.
உலகம் [...]<img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=xavierbooks.wordpress.com&blog=5605767&post=29&subd=xavierbooks&ref=&feed=1" />]]></description>
		<link>http://xavierbooks.wordpress.com/2008/11/23/jesus_part6/</link>
			</item>
	<item>
		<title>சில நிகழ்வுகள்</title>
		<description><![CDATA[ 
நிகழ்வுகள்
யோவான் கொலையாகிறார்
ஏரோது மன்னன்
பிறர் மனை நோக்கிய
பாவத்தில் விழுந்தான்.
அவன் சகோதரன் மனைவி
ஏரோதியாளை,
மோகத்தின் வேகத்தால்
தன்
திருட்டு உறவில் திணித்திருந்தான்.
செய்தி அறிந்த யோவான்
மன்னனிடம் வந்தார்.
முதுகு நிமிர்த்த
மக்கள் மறுக்கும்
மன்னனின் அரியணை முன்
எதிர்ப்புக் குரலை எறிந்தார்
நீ
அவளை வைத்திருக்கலாகாது.
இச்சையின்
கச்சையைக் கழற்றி எறி.
பறவையை
உரிய இடத்தில் பறக்கவிடு.
யோவானின் அறிவுரை
ஈட்டிகள்
ஏரோதின் அரச கர்வத்தைச்
சீண்டியது.
அவன் கோபத்தின் திரியைத்
தூண்டியது.
ஆனாலும்
மக்களின் மனதில்
யோவான் இருந்ததால்
மலைகளை விழுங்கி அமைதியாய்
கிடக்கும்
பெருங்கடலாய் பொறுமை காத்தான்.
யோவான் திரும்பினார்
ஏரோது திருந்தவில்லை.
ஏரோதின் பிறப்பு விழாவில்
ஏரோதியாள் மகளின் நாட்டிய விருந்து.
சபையின் நடுவிலே
வானவில் வளையங்களை
விரித்தாடும் மயிலென
அவள்
நாட்டியச் சுடரில் அனைவரும்
நனைந்தனர்.
மன்னனின் ஆனந்தம்
கொழுகொம்பின்றி
அலைந்தது.
சிறுமியே
எது வேண்டும் கேள்
அதைத் தருவேன் நான்
என்றுரைத்தான் ஏரோது.
சிறுமி ஓடினாள்
தாயை [...]<img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=xavierbooks.wordpress.com&blog=5605767&post=27&subd=xavierbooks&ref=&feed=1" />]]></description>
		<link>http://xavierbooks.wordpress.com/2008/11/23/jesus_part5/</link>
			</item>
	<item>
		<title>இயேசு சொன்ன உவமைகள்</title>
		<description><![CDATA[ 
 உவமைகள்
 
உவமைகள்,
அறிவுரைகளை ஏற்றிச் செல்லும்
அற்புத வாகனம்,
செய்திகளை செவிவழியாய்
உள்ளத்தில் ஊன்றும்
உன்னத வழி.
அறிவுரைகள் ஆழமானவை
உவமைகளோ அழகானவை.
வாசத்தை பூக்களில் ஊற்றி
நுகரவைக்கும் கலையே
உவமைகளில் உரையாடல்.
இயேசுவின் உவமைகள்
அழகானவை,
ஆழத்தைச் சுமந்ததால் அழகானவை.
எளிமையானவை,
எளியவரின் மனம் நோக்கிச் சென்ற
இலகுவானவை.
 
விண்ணரசு, விவசாயி
 
இயேசு
விண்ணரசு குறித்த
விளக்கங்களை
உவமை விளக்குகளாய்
ஏற்றி வைத்தார்.
விண்ணரசு
தன் விவசாய நிலத்தில்
நல்லவிதைகளை
பதியனிட்ட
ஒருவனுக்கு ஒப்பாகிறது.
பயிர் விதை விதைத்த
நிலத்தில்
களை விதை விதைக்கிறான்
பகைவன் ஒருவன்.
பூமிக்குள் பதுங்கும் வரை
விதைகளின் வித்யாசம்
வெளிச்சத்துக்கு வருவதில்லையே.
முளைகள் மெல்ல
காற்றைக் கிழித்து
பூமியைக் கடந்தபோது தான்
களைகள் கலந்திருப்பது
கண்களுக்குள் விழுந்தது.
வேலையாள் வருந்தினான்
பயிர்களின் உரத்தை
களைகள் களவாடுகிறதே
என்று
கவலைப்பட்டான்
களைகளைப் பிடுங்கி
களைந்திடவா என்றான்.
எஜமான் சொன்னார்.
வேண்டாம்,
களை பிடுங்கும் வேளை
நீ
பயிர் பிடுங்கக் கூடும்.
பயிர் ஒன்றேனும்
உயிர் விடுதலில்
எனக்கு
உடன்பாடில்லை.
அறுவடை வரை
இரண்டையும் இணைந்தே [...]<img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=xavierbooks.wordpress.com&blog=5605767&post=25&subd=xavierbooks&ref=&feed=1" />]]></description>
		<link>http://xavierbooks.wordpress.com/2008/11/23/jesus_8/</link>
			</item>
	<item>
		<title>இறைமகனின் விளக்கங்கள்</title>
		<description><![CDATA[ 
 
பணியாளரே துணிவு பெறுங்கள்
 
சீடர்களுக்கு இயேசு
வார்த்தெடுத்த
வார்த்தைகளால்
வலுவான செய்திகள் சொன்னார்.
பயணத்தின் ஓரத்தில்
பயம் கொள்ளாமலும்,
வெப்பத்தின் வெப்பத்தில்
வெந்துபோகாமலும்,
மனசை மலையாக்கும்
ஒப்பற்ற அறிவுரைகள் அவை.
o
ஆன்மாவைக் கொல்லும்
ஆயுதம் இல்லாதவருக்காய்
அஞ்சவேண்டாம்.
மனிதரின் வாட்கள்
உடலோடு மட்டுமே உறவாடும்,
உடல் வலிக்காய்
அஞ்சாதீர்கள்.
சாவு என்பது
சரீரத்தோடு மட்டுமே
சம்பந்தப் பட்டதல்ல,
மனிதாபிமானம் மரித்துப் போனால்,
தரணியில் வாழ்வதில்
தரம் ஏதும் இல்லை.
o
ஓநாய்களிடையே
உலவும் ஆடுகளாய் நீங்கள்.
பாம்பின் விவேகமும்
புறாவின் பரிசுத்தமும்
அணிகலனாய் அணியுங்கள்.
சமாதானத்தின்
சாகுபடி செய்யுங்கள்.
o
மறைக்கப்பட்டவை
என்றேனும் வெளிப்பட்டே தீரும்.
இரவின் நிறம்
பகலால் துடைக்கப்படும்.
நான்
உங்கள் காதுக்குச் சொன்னதை
நீங்கள்
உலகிற்கு உரக்கச் சொல்லுங்கள்
o
உலகின் உறவுகள்
உன்னதரால் வழங்கப்பட்டவை,
உலக உறவுக்காய்
உன்னதரை உதாசீனப் படுத்தாதீர்கள்
o
 
யார் நன்மை செய்ய வேண்டும்
 
யோவான்
இயேசுவிடம் ஓர்
குழப்பக் கேள்வியை வைத்தார்.
உமது
பெயரைச் சொல்லி ஒருவன்
பேய்களை ஓட்டுகிறான்
நல்ல செயல்கள் [...]<img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=xavierbooks.wordpress.com&blog=5605767&post=23&subd=xavierbooks&ref=&feed=1" />]]></description>
		<link>http://xavierbooks.wordpress.com/2008/11/23/jesus_part3-2/</link>
			</item>
	<item>
		<title>இயேசுவின் புதுமைகள்</title>
		<description><![CDATA[ 
 
 அற்புதங்கள் அற்புதங்களே
 இயேசுவின் புதுமைகள்.
அவை,
நம்பிக்கைக்கு அளிக்கப்பட்ட
நன்கொடைகள்.
விசுவாசத்துக்கு அளிக்கப்பட்ட
விருதுகள்.
மாந்திரீகத்தின்
மந்திரக் கோல் அல்ல
இயேசுவின் புதுமைகள்,
அவை
உறுதியை வளர்க்கப்
பவனி வந்த
அவனியின் ஆச்சரியங்கள்.
கானாவூர் திருமணம், அற்புதத்தின் ஆரம்பம்
 
முதலவன் செய்த
முதல் புதுமை இது.
கலிலேயாவில் கானாவூரில்
கல்யாணம் ஒன்று
கலகலப்பாய் நடந்தது.
பிந்தியவர்க்கு
பந்தியில் பரிமாற
திராட்சை ரசம் இல்லாமல்
திருமண வீடு
குறையொன்று கண்டது.
இயேசுவும், தாயும், சீடரும்
விருந்துக்காய்
வந்திருந்தனர்.
இறைவனின் திட்டம்
அன்னை மரி
அறிந்திருக்க வேண்டும்.
மகனின் மனசுக்கு
ஓர்
மனு அனுப்பினார்.
திராட்சை இரசம் தீர்ந்துவிட்டது!.
விண்ணப்பத்தை வாங்கிய
விண்ணக மகன்
வினவினார்.
என் நேரம்
வரவில்லையே அம்மா?
புதுமைகளில் படிக்கட்டுகளை
இப்போதே அடுக்குதல்
அடுக்குமா ?
தாய் தடுமாறவில்லை,
பணியாளரைப் பார்த்தார்
இயேசு சொல்வதை
மறுக்காமல் செய்யுங்கள்
என்றார்.
ஆறு கற்சாடிகள்
யூதரின் 
ஒழுங்கு முறைப்படி
அங்கிருந்தது.
தண்ணீர் நிறையுங்கள்
சாடிகளின் கழுத்துவரை !
அமைதியாய் சொன்னார்
ஆண்டவர்.
இதென்ன வினோதம் ?
கைவசம் ரசமுமில்லை,
வாங்கி வர [...]<img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=xavierbooks.wordpress.com&blog=5605767&post=21&subd=xavierbooks&ref=&feed=1" />]]></description>
		<link>http://xavierbooks.wordpress.com/2008/11/23/jesus_part3/</link>
			</item>
	<item>
		<title>இயேசுவின் போதனைகள்</title>
		<description><![CDATA[ 
 
மலைப் பொழிவு
 
போதனைகள்!
அவை வாழ்வின் சுருக்கங்களைச்
சலவை செய்யும்
சாமர்த்திய சாலிகள்.
வாழ்வுக்கான போதனைகள்
மனசை வளமாக்கும்,
தடுமாற்றம் விடுத்து
தடம் மாற்றச் சொல்லும்.
இயேசு போதித்தார்.
அன்றாட வாழ்க்கையை
அலசிப் பிழியும் போதனைகள்.
கழுத்தறுக்கும்
ஆயுதப் போதனைகளல்ல
அழுக்கறுக்கும்
ஆயத்தப் போதனைகள்.
o
மலை மேல் ஒரு நாள்
மனுமகன் போதித்தார்.
அது
சட்டங்கள் மேல்
ஓர் எந்திரக்கல்லாய் அமர்ந்தது.
தாழ்வு மன இதயங்களை
இழுத்து நிமிர்த்தியது.
சோர்வுற்ற சமுதாயத்துக்கு
புத்துணர்வுத் தைலம் பூசியது.
அந்தப் போதனை
இது தான்.
o
எளிய மனம் கொண்டவர்கள்
பேறுபெற்றோர்
விண்ணரசு அவர்களதே.
துயருறுவோர்
பேறுபெற்றோர்
ஆறுதல் அவர்களுக்கானதே.
சாந்தமுள்ளோர்
பேறுபெற்றோர்,
மண்ணுலகு அத்தகைய மனிதருக்கே.
நீதி யின் மேல்
பசியும் தாகமும் கொண்டோ ர்
பேறுபெற்றோர்,
நிறைவு அவர்களுக்கான வரம்.
இரக்கம் கொள்வோர்
பேறுபெற்றோர்
இரக்கம் பெறுவோர் அவரே.
தூய உள்ளத்தோர்
பேறுபெற்றோர்,
கடவுளைக் காணும்
கண்கள் அவர்களதே.
சமாதானம் விதைப்போர்
பேறுபெற்றோர்,
கடவுளின் குழந்தைகள்
சமாதானத்தின் சந்ததிகளே.
நீதிக்காய் வதைக்கப்படுவோர்
பேறுபெற்றோர்
விண்ணரசு [...]<img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=xavierbooks.wordpress.com&blog=5605767&post=19&subd=xavierbooks&ref=&feed=1" />]]></description>
		<link>http://xavierbooks.wordpress.com/2008/11/23/jesus_part2/</link>
			</item>
	<item>
		<title>இயேசுவின் இளமைக்காலம்</title>
		<description><![CDATA[இயேசுவின் பிறப்பு

 
எல்லா பயணங்களும்
ஒரு
முதல் புள்ளியின் நீளல்களே.
பிறந்தபின் சிறந்தவராவர்
மனிதர்.
பிறப்பே சிறப்பானது
இறைமகன் பிறப்பில் தான்.
கலிலேயாவின் நாசரேத்தில்
கன்னியாயிருந்த மரியாளுக்கு
கபிரியேல் தூதர்
வான் வாழ்த்தொன்றை வழங்கினார்.
கன்னியான உமக்குள்
கடவுள் அவதரிப்பார்.
மரியாளின் மனதுக்குள்
அணையாது எரிந்தது
அந்த
சம்மனசு சொன்ன சங்கதி.
மரியாள் இன்னும்
தாயாராக
தயாராகவில்லை.
ஆண் வாசனை அறியாத
என் வாசலுக்குள்
ஓர்
ஆன்மீகக் குழந்தை அவதரிக்குமா ?
இதெப்படிச் சாத்தியம்
இல்லாமையிலிருந்து
ஓர்
இறைமகனின் அவதாரம் ?
ஏளனப் பார்வைகள் என்
கற்புக் கதவை
சந்தேகப் படாதா ?
ஆயிரம் கேள்விகளை
வினாடிக்குள் இழுத்து,
அத்தனை கேள்விகளையும்
அந்த
வினாடியின் முடிவில்
ஒடித்துப் போட்டது மரியின் உறுதி.
கோடி மக்களுக்குக்
கிடைக்காத பாக்கியம்
தேடி வந்திருக்கிறதே
என பிரமிப்புப் பூக்களை
விழிகளில் பயிரிட்டாள்.
சஞ்சலத்தின் வேர்களை
வெட்டிவிட
சம்மதம் செய்தாள்.
மண ஒப்பந்தமாகியிருந்த
மரியாள்,
மன ஒப்பந்தமும் கொண்டாள்.
புதியவனை உள்ளுக்குள்
பதியம் கொண்டு,
பூமிக்கு [...]<img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=xavierbooks.wordpress.com&blog=5605767&post=17&subd=xavierbooks&ref=&feed=1" />]]></description>
		<link>http://xavierbooks.wordpress.com/2008/11/23/jesus_part1/</link>
			</item>
</channel>
</rss>